மீண்டும் பேரினவாதத்தை உமிழும் சரத் வீரசேகர!

28.11.2022 10:13:44

வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்களை விஸ்தரித்தாலும் காணி மற்றும் காவல்துறை அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட்ட போதும் அந்த உரிமைகளை தமிழ் தலைமைகள் பாதுகாத்துக் கொள்ளவில்லை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

கடும் வார்த்தைப்பிரயோகம்

சமகால அரசியல் நிலைவரம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது. அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இராணுவ வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த முடியாது

அதுமட்டுமன்றி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த போவதில்லை. 

மேலும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.