இரசாயன உர இறக்குமதி தடையால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

22.09.2021 03:22:04

இரசாயன உர இறக்குமதி தடையால், தேயிலை உற்பத்தியின் அளவு குறைவடைந்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதில் 30 சதவீத இலங்கை தேயிலையைக் கலந்து மீள் ஏற்றுமதி செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதனால் தரமற்ற இலங்கை தேயிலை சர்வதேச சந்தைக்கு செல்லும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.