மருத்துவபீட மாணவனின் மரணம்: வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்

28.11.2021 16:51:04

 

பிரதமர் ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) உத்தரவிற்கு அமைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணைக் குழுவில் குற்றவாளிகளின் உறவினர், நண்பர்கள் இடம்பெற்று இருப்பதனால் முக்கியமான தகவல்கள் பல மறைக்கப்பட்டுள்ளதாக அவரின் சகோதரன் பிரதமர் மகிந்தராஜபக்சவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திலே 3வது வருட கல்வி கற்று வந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்ற இளைஞன் கடந்த 17.11.2020 அன்று அவர் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அப்போது கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த வீரசிங்க என்பவர் தற்கொலை என கூறி எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.