தையிட்டி காணிகளை பொதுமக்களிடமே வழங்க வேண்டும்.

31.12.2025 12:08:30

தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமல தர்ம தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் நான் ஏற்கனவே இதனைக் கூறியுள்ளேன். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்பதனால் அதனை உரித்துடைய பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று மீண்டும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.