‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி இன்று கிழக்கு விரைகிறது

03.12.2021 06:35:54

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (3) முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையில் அதன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.