ரிஷாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை !
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமி குறித்து எதிர்க்கட்சி எதனையும் ஏன் கூறவில்லை? ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா? சிறுவர் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டு முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா? என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
மலையகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் உயிரிழந்துள்ளார். அவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக மரண அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது பொலிசாருக்கு தெரிந்தவுடன் ரிஷாட் பதியுதீன் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விட்டார். இது குறித்து எதிர்க்கட்சியினர் என்ன கூறுகின்றீர்கள்.
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோமா? சிறுவர் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டு முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா? வாய் திறந்து எதிர்ப்போமா என்றார்.