சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

08.04.2024 07:49:48

இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் .ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இதன் மூலம் கிடைத்த வருமானம் 1,025 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

மேலும் 2018ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 23 இலட்சம் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.