வன்னி அரசை சந்தித்தார் எம்.பி. சிறீதரன்.

24.06.2026 09:00:00

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை அவரது அமைச்சு அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

 

இந்தச் சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராக தனது பொறுப்புகளை முன்னெடுத்து வரும் அமைச்சர் வன்னி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த சிறீதரன், நினைவுப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார்.

 

சந்திப்பில் சமூக நீதி, அரசியல் மற்றும் தமிழர் சமூகத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னி அரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்நாடு அரசில் சமூக நீதித்துறை அமைச்சராகவும், கட்சியின் மாநில விவகாரங்கள் தொடர்பான கொள்கைக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.