கிளிநொச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம் : வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள்!

04.12.2023 14:47:42

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றையதினம் இரவு 3 காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகள் புகுந்து வாழ்வாதாரத்துக்காக பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி, வாழை என்பனவற்றை முழுதாக அழித்துள்ளன.

அத்துடன், யானையை துரத்துவதற்காக முற்பட்டவர்களையும் யானை அச்சுறுத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் யானையால் தாக்கப்பட்டு வலது கால் செயல் இழந்த நிலையில், தற்பொழுது தனக்கு எந்த ஒரு தொழிலுக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இந்தியாவிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன் நாடு திரும்பி வாழ்ந்து வருவதுடன், பலமுறை யானைகளினால் தனது பயிர்களுக்கு தொடர்ந்தும் சேதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.