25,000 ரூபாய் பணம் கொள்ளை - வயோதிபப் பெண் படுகொலை

26.09.2021 12:44:31

வெலிக்கடை காவற்துறை பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்துவிட்டு, சுமார் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச்  சென்றுள்ளார்.

இது தொடர்பில் வெலிக்கடை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், இராஜகிரிய வீதியை சேர்ந்த 71 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் வெலிக்கடைப் காவற்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.