மகிந்த ஆதரவு எம்.பி மரணம்

09.05.2022 17:38:10

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள இன்று இடம்பெற்ற போராட்ட களத்தில் உயிரிழந்தமை தொடர்பில் பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள , நிட்டம்புவை பிரதேசத்தில் தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக நிட்டம்புவை நகரில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள் அவரது வாகனத்திற்கும் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை தாக்கி, வாகனத்தை நடு வீதியில் கவிழ்துள்ளனர்.

இதன்போது அத்துகோரள, கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதுடன், அவரது சாரதி எனக் கூறப்படும் நபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.