மறைந்த ஏ.டி.ஆரியரத்னவின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சலி!

19.04.2024 15:00:00

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்னவின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன கடந்த 16ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். அன்னார் அவரது 92ஆவது வயதில் காலமானார்.

1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி காலி மாவட்டத்தின் உனவடுன பிரதேசத்தில் பிறந்த ஆரியரத்ன இலங்கை அரசியலிலும் சமூக அபிவிருத்தியிலும் தொடர்ச்சியான செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளையதினம் சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.