பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்

07.04.2024 09:24:09

பெங்களூரு: பேரிடர் நிதியை விடுவிக்காத பா.ஜ.க. அரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடும் வறட்சியால் 48 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி பொய்த்துப்போனதால் 38 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு ரூ.4,663 கோடி ஒதுக்க வேண்டும் எனவும் கூறினார்.