பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

31.07.2021 15:24:06

பெரு மற்றும் தெற்கு ஈகுவடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.'பெரு நாட்டின் சுல்லானா நகருக்கு கிழக்கே 8 கி.மீ., தொலைவில் நேற்று மாலை 5:10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 33.18 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்தது' என, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் சில கீழே விழுந்துள்ளன. நிலநடுக்க அதிர்வால் அச்சத்தில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால், முழுமையான சேத விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், 'சிறிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன' என, கூறப்படுகிறது.