இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

24.11.2021 06:41:26

இந்தியாவில்  திங்கட்கிழமை ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அதேநேரம் நேற்று ஒரேநாளில் 236 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது.