தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்.

28.10.2025 14:43:59

தேசிய புலனாய்வு பிரிவின்  புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட,  ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை, செவ்வாய்க்கிழமை (28) பொறுப்பேற்றுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தை மேஜர் ஜெனரல் நியங்கொட திங்கட்கிழமை (27)  பெற்றுக்கொண்டார்.