வடக்கு மாகாண மக்களை இனி ஏமாற்றமுடியாது!

29.03.2024 14:06:27

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்மாகாணமக்களை போன்று வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்

 

காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தாமே ஜனாதிபதி வேட்பாளர் என வலுக்கட்டாயமாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று கூறுகின்றார்.

ஆனால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக இதுவரை தெரிவ செய்யவில்லை. தென்பகுதிமக்களையம் வடபகுதிமக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுக்கு உண்டு.எனவே வடக்கு மக்களை இனியும் அவரால் ஏமாற்ற முடியாது.

ஐக்கிய தேசியக்கட்சியினால் வெறும் ஒன்றரை லட்சம் வாக்குகளை மாத்திரமே பெறமுடியும்.எனவே இவை அனைத்தும் ஏமாற்று செயற்பாடாகும்.மக்களின் நிராகரிப்புக்குள்ளான இவர்களின் அரசியல் பயணத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்” இவ்வாறு சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.