மகாராஷ்டிராவில் நாளை தேர்தல் ஆரம்பம்!

18.04.2024 08:55:18

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நாளை ஆரம்பமாகி மே 20-ஆம் திகதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில், மும்பை புறநகர் துணை தேர்தல் அதிகாரி தேஜஸ் சாமெல் அனுப்பியுள்ள உத்தரவில், அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் விமானங்கள் பற்றியும் பயணம் செய்பவர்களின் விவரங்களை பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் அனுப்ப உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பிறப்பிக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.