அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

01.08.2021 05:07:00

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்பு – விகாரமாதேவி பூங்காவில் செலுத்தப்படவுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாளைய தினம் பத்தரமுல்லை – தியத்த உயன மற்றும் கொழும்பு விகாரமாதேவி பூங்கா ஆகிய இடங்களில் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசரப்பட வேண்டாம் என்றும், இது வழங்கப்பட வேண்டிய அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.