ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி பிரசாரம்!

04.04.2024 14:30:10

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரமாண்டக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடவுள்ளார். இந்நிலையில், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், அண்ணா மலைக்கு எதிராகவும் குறித்த பிரச்சாரம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தியின்  வருகையை யொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.