
பாகிஸ்தானில் விபத்து! 30பேர் படுகாயம்!
02.08.2025 09:17:16
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று இரவு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 30பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த ரயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லாகூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஷேகாபுரா ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்பு புரண்டுள்ளன.
இந்த விபத்தில் ரயில் பயணிகளில் 30 பேர் படுகாயமடைந்ததுடன் விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.