வடக்கில் மேலும் 130 பேருக்கு கொரோனா

05.08.2021 05:40:58

வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் என்பவற்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய யாழ்.மாவட்டத்தில் 84 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.