டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு சீன அரசாங்கம் உதவி!

07.05.2024 08:00:25

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு இணங்க சீன அரசாங்கம் உதவிகளை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கலப்பு கற்றல் முறையை திறம்படவும் திறமையாகவும் செயல்படுத்தவும், வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு சிறப்புத் திறன்களைக் கொண்ட ஆசிரியர்களின் அறிவை வழங்கவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை சந்தர்ப்பங்களில் சீர்திருத்தங்களை எளிதாக்கவும் இந்த சாதனங்கள் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், முன்மொழியப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது