அவசரகாலச் சட்டம் தொடர்பில் வெளிவந்த தகவல்..

21.05.2022 09:26:09

இலங்கையில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் இரத்தாகியுள்ளது.

கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே அவசரகாலச் சட்டம் நேற்றிரவு முதல் இரத்தாகியுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் 14 நாட்களில் அவசர கால சட்டம் இரத்தாவதாக பேராசியர் பிரதிபா மஹாநாமஹேவா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.