சாலைகள், வடிகால்கள் சேதம் குறித்து மத்திய குழுவிடம் விளக்கியுள்ளோம் : ககன்தீப் சிங்

22.11.2021 09:14:06

சாலைகள், வடிகால்கள் சேதம் குறித்து மத்திய குழுவிடம் விளக்கியுள்ளோம் என சென்னை பெருநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்தார். 700-க்கும் மேற்பட்ட பம்புகளை பயன்படுத்தி வெள்ளத்தை வெளியேற்றினோம் என பேட்டியில் கூறினார்.

மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கியதை விளக்கினோம் என கூறினார். தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சேதம் குறித்து விளக்கினோம் என எடுத்துரைத்தார்.