சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

23.04.2025 14:08:15

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். இச் சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இதன்போது ”பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் பலியானதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது எனவும், ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு எனவும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் தாக்குதலில் தமிழர்கள் சிலர் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த உடனேயே அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தாம் உத்தரவிட்டுள்ளதாகவும்,  காஷ்மீர் அரசுடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவி செய்யுமாறு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஜனநாயகத்தில் இடமில்லை எனத் தெரிவித்த முதலமைச்சர் பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்க  தான் உத்தரவிட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.