100 கோடி தடுப்பூசி ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறது சீனா

30.11.2021 08:20:16

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாறிய ‛ஒமைக்ரான்' வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, அதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா அனுப்ப முடிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தான் நவ., 24ம் தேதி முதல்முறையாக ‛ஓமைக்ரான்' வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ‛ஓமைக்ரான்' வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் சீனா சர்வதேச விமானப் போக்குவரத்தை தங்கள் நாட்டிலிருந்து தொடங்கவில்லை.