அதிமுகவுக்கும் - திமுகவும் இடையே தான் போட்டி.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எப்போதும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மூன்றாவது ஒரு சக்தியை ஊடகங்கள் தான் செயற்கையாக பெரிதுபடுத்துகின்றன என்றும், கள யதார்த்தத்தில் அந்த கட்சிக்கு எவ்வித தாக்கமும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். "அவர்கள் களத்திலேயே இல்லை" என்று குறிப்பிட்ட அவர், தேர்தலை சந்திக்கும்போது மட்டுமே மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது தெரியும் என்றும், அப்போது அவர்களின் வாக்கு சதவீதம் அம்பலமாகும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
கடந்த ஐம்பது ஆண்டுகால தமிழக அரசியலில் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்திய தடம் ஆழமானது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், புதிய வரவுகளால் அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைக்க முடியாது என்று உறுதிபட கூறினார்.