திலீபன் நினைவுத்தூபி முன்பாக பொலிஸ் அராஜகம்; அஞ்சலி செலுத்த வந்த கஜேந்திரன் கைது

23.09.2021 13:24:07

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் தினைவுத் தூபி முன்பாக இன்று பிற்பகல் அஞ்சலி செலுத்தச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது முன்னணியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் பொலிஸாரால் காலால் உதைக்கப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து வெள்ளை வான் ஒன்றில் பொலிஸார் அவரைக் கைது செய்து பலவந்தமாக அழைத்துச் சென்றனர்.

அஞ்சலி செலுத்த வந்த கஜேந்திரன், அவருடன் இணைந்திருந்த 2 தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது முன்னணியின் பெண் உறுப்பினர்கள் பலரும் பொலிஸாரால் தாக்கப்பட்டனர்.