‘ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக்கொண்டாடிக் குதூகலிப்போம்’

17.07.2021 10:00:00

‘ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக்கொண்டாடிக் குதூகலிப்போம்’ எனும் கருப்பொருளில் மன்னாரில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

மன்னார் அன்னை இல்லத்தில், மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும்  மாவட்ட அரசாங்க அதிபரினால், மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.