ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

30.11.2021 07:13:52

ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி, கட்டுகஸ்தோட்டைப் காவல்துறை பிரிவில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வட்டபுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.