மேல் மாகாணத்தில் இன்று சிறுவர்களுக்கு தடுப்பூசி

27.09.2021 06:22:47

நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் உள்ள சகல பிரதான வைத்தியசாலைகளிலும் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷாமன் ராஜேந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள சகல பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.