குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

03.12.2021 06:47:38

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகிழடித்தீவைச் சேர்ந்த சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்பவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது வதிவிடத்திலிருந்து பன்சேனை பிரதேசத்திற்கு தனது தாய்யின் வீட்டுக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டுத் தோட்டம் செய்கை பண்ணப்பட்ட வளாகத்தில்உள்ள மரம் ஒன்றில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் ஆடுகளை மேச்சலுக்கு கொண்டு சென்ற ஒருவர் கண்டு மரணமானவரின் வீட்டாருக்கு சம்பவத்தை தெரிவித்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.