மகசின் சிறைக் கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழப்பு.

07.08.2026 08:14:49

மகசின் சிறையில் நேற்று (06) வெடித்த கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை மகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு பதற்றமான சூழல் நிலவியது.

இதனை தொடர்ந்து, சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் விசேட அதிரடிப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் தற்போது பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்தார்.