காலணி உற்பத்தியில் தமிழகத்தை மாற்ற திட்டம்.

30.01.2026 09:02:08

தமிழகத்தை உலகளா​விய காலணி உற்​பத்​தி​யின் மிக முக்​கிய மைய​மாக மாற்​றும் நோக்​கில், இத்​தாலி பல்​கலைக்​கழகத்​துடன் கோத்​தாரி நிறு​வனம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டுள்​ளது.

 

காலணி உற்​பத்​தி​யில் வடிவ​மைப்பு மற்​றும் ஆராய்ச்​சி​யில் சிறந்து விளங்​கும் இத்​தாலி​யின் புகழ்​பெற்ற ‘இத்​தாலியன் யுனிவர்​சிட்டி ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன்’ பல்​கலைக்​கழகத்​துடன், கோத்​தாரி இண்​டஸ்ட்​ரியல் கார்ப்​பரேஷன் லிமிடெட் நிறு​வனம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனத்​தின் தலை​வர் ஜின்னா ரஃபீக் அகமது செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஐரோப்​பிய ஒன்​றி​யம் மற்​றும் இந்​தியா இடையே கையெழுத்​தாகி​யுள்ள தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் மிக​வும் முக்​கிய​மான​தாகும்.

இதன்​மூலம் தோல் அல்​லாத காலணி​களுக்கு விதிக்​கப்​பட்​டிருந்த 17 சதவீத வரி தற்​போது பூஜ்ஜிய​மாக குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், ஏற்​றுமதி வளர்ச்சி அதி​கரிக்​கக்​கூடும்.

குறிப்​பாக, கடந்த 6 மாதங்​களில் அமெரிக்க வரி விதிப்​புக்கு பின் இந்​தி​யா​வுக்கு வரவேண்​டிய ஏராள​மான முன்​னணி நிறு​வனங்​களின் தொழிற்​சாலைகள் இந்​தோ​னேஷி​யா​வுக்கு சென்​று​விட்​டன. தற்​போது ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துட​னான ஒப்​பந்​தத்​தால் மீண்​டும் பிரபல நிறு​வனங்​கள் இந்​தி​யா​வுக்கு வரு​வதற்​கான வாய்ப்​பு​கள் உரு​வாகி​ உள்​ளன.

தற்​போது கோத்​தாரி நிறு​வனம் பெரம்​பலூரில் ‘கி​ராக்​ஸ்’ பிராண்டு காலணி​களை தயாரித்து வரும் நிலை​யில், கரூரில் ‘அடி​டாஸ்’ பிராண்​டுக்​கான பிரம்​மாண்ட உற்​பத்தி ஆலையை கட்டி வரு​கிறது.

 

மேலும், கோவையைச் சேர்ந்த ‘ஜோடிஸ்’ மற்​றும் ‘சீட்​லோ’ பிராண்​டு​களை கையகப்​படுத்​தி​யுள்ள கோத்​தாரி நிறு​வனம், அடுத்​தகட்​ட​மாக 70 நாடு​களில் கிளை​களைக் கொண்​டுள்ள சர்​வ​தேச பிராண்​டான ‘கிக்​கர்​ஸ்’ நிறு​வனத்​தை​யும் கையகப்​படுத்​தவுள்​ளது.ஒரு இந்​திய நிறு​வனம் சர்​வ​தேச பிராண்​டின் உரிமையை மட்​டும் பெறாமல், அந்த நிறு​வனத்​தையே உரிமை​யாள​ராக முழு​மை​யாக கையகப்​படுத்​து​வது இதுவே முதல் முறை.

மேலும், காலணி உற்​பத்​திக்​குத் தேவை​யான மூலப்​பொருட்​களை தயாரிப்​ப​தற்​காக உலகளா​விய நிறு​வனங்​களு​டன் இணைந்து பெரம்​பலூரில் ஒரு பிரத்​யேக மூலப்​பொருள் பூங்கா​வும் அமைக்​கப்பட உள்​ளது. அதே​போல் சில்​லறை வர்த்​தகத்​தில் உள்ள 2,500 விற்​பனை நிலை​யங்​களை 6 ஆயிர​மாக​வும் உயர்த்த திட்​ட​மிட்​டுள்​ளோம்.

இப்​பணி​களின் மூலம், அடுத்த 2 ஆண்​டு​களில் தமிழகம் உலக அளவில் காலணி உற்​பத்​திக்​கான பெரிய இடமாக மாறி​யிருக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்​வில் கோத்​தாரி நிறு​வனத்​தின் இயக்​குநர் மற்​றும் தலைமை செயல் அதி​காரி என்​.​முத்​து​மோகன் உடனிருந்​தார்.