அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணம் அதிகரிப்பு!

08.04.2024 15:04:15

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் மற்றுமொரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

 

உமா சத்ய சாய் கட்டே என்ற தெலுங்கு மாணவர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 14 உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்தே இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

கொலை, விபத்து, மர்ம உயிரிழப்பு மற்றும் பல வகையில், இந்திய மாணவர்களின் உயிரிழப்புக்கு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதால், இவ் விடயம் குறித்து, அமெரிக்க உளவுப் பிரிவு எப்பிஐ விசாரணை நடத்த வேண்டும் என ‘தி குளோபல் இந்து ஹெரிடேஜ் அறக்கட்டளை’ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் உயிரிழப்புக்கள் கவலை அளிப்பதாக, 175 கடிதங்கள் வந்து