22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

21.10.2022 15:54:51

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 173 வாக்குகள் செலுத்தப்பட்ட நிலையில் எதிராக ஒரு வாக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 173 மேலதிக வாக்குகளால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி காலை 9.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.