உமா ஓயாத் திட்டம்: இரு பணிப் பெண்களுக்குக் கௌரவம்!

24.04.2024 07:34:53

உமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 60 மெகாவோட் திறன் கொண்ட  இரு மின் உற்பத்தி இயந்திரங்களுக்கு அங்கு பணி புரிந்த இரு பணிப் பெண்களின்  பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த இரு பெண்களின் சேவையைப் பாராட்டி அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவே குறித்த மின் உற்பத்தி இயந்திரங்களுக்கு  ‘தசுனி’ மற்றும் ‘சுலோச்சனா’ என பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.