பேரறிவாளன் விடுதலை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

18.05.2022 14:10:21

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது.

அதேசமயம் ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.