நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை !

31.01.2021 10:13:58

அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சசிகலாவும் அவரோடு இருந்தவர்களும், 2017-ம் ஆண்டிலேயே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத அவர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை. அது சட்டத்திற்கும் எதிரானது.

மேலும் அவருக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்தவும் உரிமைகள் கிடையாது.