வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது இந்தியா

15.10.2021 14:09:06

இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் இன்று(15) முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களுக்கு இந்தியா அனுமதி வழங்கவுள்ளதாக  வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.