784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன

16.03.2021 08:43:29

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதேவேளை நேற்று திங்கட்கிழமை மட்டும் 11 ஆயிரத்து 489 பேர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அண்மையில் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி தடுப்பூசி, தற்போது முன்னுரிமை அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெருகின்றன.