2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது

25.09.2021 12:04:00

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் 6 மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தி வருகிறார். குற்றச்செயல்களை தடுப்பதற்கான காவல்துறையின் அதிரடி நடவடிக்கை தொடரும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.