தீபச்செல்வனிடம் ரி.ஐ.டி. விசாரணை

12.04.2024 15:13:56

எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காகத் தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரான தீபச்செல்வனிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எழுத்தாளர் நா.யோகேந்திரநாதனின் '34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு' என்ற புத்தகம் எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்தப் புத்தக வெளியீடு தொடர்பாக நேற்று விசாரணை இடம்பெற்றது என்று தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.