கொழும்புத் துறைமுகத்தில் பாகிஸ்தான் ​போர்க்கப்பல்கள்!

13.04.2026 14:24:11

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ​போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்களே இவ்வாறு சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினரால் அக்கப்பல்கள் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளன. மேலும், இந்த போர்க்கப்பல்கள் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படைப் பயிற்சியொன்றிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.