கொழும்புத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்!
13.04.2026 14:24:11
|
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்களே இவ்வாறு சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
|
இலங்கைக் கடற்படையினரால் அக்கப்பல்கள் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளன. மேலும், இந்த போர்க்கப்பல்கள் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படைப் பயிற்சியொன்றிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |