சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஆரம்பம்!

29.11.2021 06:32:27

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக கொள்வனவு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள 700,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் அடுத்த சில நாட்களில் கொழும்பு துறைமுகத்தினை வந்தடையும் என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிக்கு முன்பே சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நவம்பர் 15ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டன.

சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு 13 நாட்கள் கடந்துவிட்டன.