
சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 748 பேர் கைது!
நாடளாவிய ரீதியாக நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 26,560 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 18 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதே நேரத்தில் நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் தொடர்புடைய 528 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அறிக்கையின்படி, மொத்தம் 64 குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 26 பேர் பொறுப்பற்ற ரீதியாக வானம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 3,675 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.