காவல்துறை வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள்..!

31.07.2022 10:06:47

அரச கட்டடங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவது சட்டவிரோத செயற்பாடு எனவும் அவ்வாறு செயல்படுபவர்களை காவல்துறையினர் வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள் எனவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

 

சட்டவிரோத செயற்பாடு ஆகும்

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச கட்டடங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கோ அல்லது அத்துமீறி அரச கட்டடங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ எவருக்கும் அனுமதி கிடையாது. அவ்வாறு செயற்பாடுவது சட்டவிரோதமாகும்.

சட்டவிரோத செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயல்படுபவர்களை காவல்துறையினர் வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள் என சுட்டிக்காட்டினார்.