தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகள்!

08.09.2025 14:56:24

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மாநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க வைக்கவும் அந்த கட்சி எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கடந்த மாதம் 22 ஆம் திகதி நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி மாநாடு (Booth Committee Conference) இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கேற்புதன் நடைபெற்றது.

தற்போது எதிர்வரும் 13 ஆம் திகதி மதுரையில் (Booth Committee Conference) பூத் கமிட்டி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்பின்னர் ஒக்டோபர் 26 ஆம் திகதி கோவையிலும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி சேலத்திலும்
டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தஞ்சாவூரிலும் மாநாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திருவண்ணாமலையிலும் ஜனவரி 24 ஆம் திகதி திருவள்ளூரில் மாநாடுகள் நடைபெற உள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.