சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தாமதம்.

14.06.2026 14:00:00

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் நாளை (15) ஆம் திகதி முடிவுகளை வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். 

முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.